Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதடுகளை அழகாக பராமரிக்க வழிகள்

மே 07, 2022 03:13

எண்ணெய் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெய்யைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
அதிலும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. கற்றாழை கற்றாழை உதடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் சிறந்தது.
மேலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை இருப்பதால், அவற்றை உதடுகளுக்குப் பயன்படுத்தும் போது, உதடுகளில் ஏற்பட்டுள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். மேலும் இதன் ஜெல்லை தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், அவை வறட்சியைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையடையவும் செய்யும்.
தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.
பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
தேன் தேனில் ஈரப்பசையைத் தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இந்த தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து வர வேண்டும். வேண்டுமானால் பகலில் கூட பயன்படுத்தலாம்.

தலைப்புச்செய்திகள்